ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க செயின்கள் வழங்கிய சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

நடிகர் சூர்யா தான் நடித்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இயக்குனர் முதல் லைட்மேன்கள் வரை அனைவருக்கும் தங்க செயின்கள் வழங்கியுள்ளார் என்றும் இதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு கோடி என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினருக்கு நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.