பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறாரா சூர்யா? மகாபாரத கதையில் சூப்பர் கேரக்டர்..!

  • IndiaGlitz, [Monday,January 15 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் மகாபாரத கதையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்க இருக்கும் ’சூர்யா 43’ படத்தில் நடிக்க உள்ளார். அதன்பின் அவர் ’வாடிவாசல்’ உள்பட ஒருசில படங்களில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் மகாபாரத கதையில் கர்ணன் கேரக்டரில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்றும் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமல்ல.. குவிந்த பரிசுகள்..!

கடந்த 100 நாட்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது என்பதும் நேற்றைய கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 3வது இடம்.. மாயா போட்ட அதிருப்தி பதிவு..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் நேற்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு

'அன்பறிவ்' படத்தை அடுத்து இன்னொரு படத்தையும் அறிவித்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் மேடையில் ஒரு ஆச்சரியம்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்கள் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ்

கடைசி நேரத்தில் மாயா சொன்ன விஷயம்.. மற்ற ஃபைனலிஸ்ட் சொன்னது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும். இந்த நிலையில் கடைசி

ஆமாம்.. இது தளபதி பொங்கல் தான்.. தரமான அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது