சொன்னதை செய்த சூர்யா! கோலிவுட் திரையுலகம் வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

நடிகர் சூர்யா தான் நடித்து தயாரித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்புக்கு திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் குறித்த அறிவிப்பில் அந்த படத்தின் வருமானத்திலிருந்து ரூபாய் ஐந்து கோடியை பல்வேறு பிரிவினர்களுக்கு நன்கொடையாக கொடுக்க இருப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் வாக்குறுதி கொடுத்தபடியே தற்போது அவர் இந்த நன்கொடை தொகையை கொடுத்துள்ளார். வாக்குறுதி கொடுத்த ரூ.5 கோடியில் முதல்கட்டமாக திரையுலகிற்கு ரூபாய் 1.5 கோடி சூர்யா கொடுத்துள்ளார். சூர்யாவின் சார்பில் அவரது தந்தை சிவகுமார் இந்த பணத்தை கொடுத்துள்ளார். சூர்யா கொடுத்த ரூபாய் ஒன்றரை கோடியில், ஒரு கோடி ரூபாய் பெப்சி அமைப்பு செல்கிறது என்பதும் அதில் குறிப்பாக அதில் ரூபாய் 20 லட்சம் இயக்குனர்கள் சங்கத்துக்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 30 லட்ச ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், 20 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்கும் சூர்யா அளித்துள்ளார்.

மீதி உள்ள மூன்றரை கோடி ரூபாயை அவர் பொது மக்களுக்கு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும். வாக்குறுதி கொடுத்த படியே சூரரைப்போற்று வருமானத்தில் இருந்து நன்கொடை கொடுத்த சூர்யாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

கொரோனா இருக்கா… வீட்டு தனிமையில் இருந்தால் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி அறிவிப்பு!!!

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தை அனுபவித்து வந்தன.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை அடுத்து மீண்டும் இணையும் கார்த்தி-பார்த்திபன்: பரபரப்பு தகவல் 

கடந்த 2011 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்'திரைப்படம் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது என்பது தெரிந்ததே

'மாஸ்டர்' படம் பார்த்தவுடன் தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ் உள்பட பலர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்

இந்தியாவின் கடைகோடி தீவையும் விட்டு வைக்காத கொரோனா!!! திடுக்கிடும் தகவல்!!!

இந்தியாவில் கொரோனா பரவல் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது

அட்லியின் உதவி இயக்குனர்கள் உள்பட சிவகார்த்திகேயனின் 3 பட இயக்குனர்கள் குறித்த தகவல்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, 'ராஜா ராணி' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில்'