இயக்குனர் சங்கத்திற்கு சூர்யா செய்த சிறப்புக்குரிய உதவி!

  • IndiaGlitz, [Thursday,October 10 2019]

சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா தங்கக்காசுகள் வழங்கி கெளரவித்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கும், இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நல நிதியாகவும் நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமாரிடம் சூர்யா வழங்கியுள்ளார். சூர்யாவின் இந்த சிறப்புக்குரிய உதவிக்கு இயக்குனர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

சூர்யா தற்போது ‘சூரறை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு.

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

'என்னை அறிந்தால்', செக்க சிவந்த வானம்' தடம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், தற்போது 'அக்னி சிறகுகள்', பாக்ஸர்'மற்றும் மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

'மிக மிக அவசரம்' ரிலீஸில் திடீர் மாற்றம்

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் நாளை வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'காலா' வில்லன்!

ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது