close
Choose your channels

கதை மீது நம்பிக்கை வைத்து  படம் எடுத்துள்ளனர். . நேற்று வெளியான படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

Saturday, October 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று த்ரிஷா நடித்த ’தி ரோட்’, விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’ மற்றும் ’இறுகப்பற்று’ உள்பட ஒரு சில படங்கள் வெளியான நிலையில் நேற்று வெளியான படம் ஒன்றுக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான திரைப்படங்களில் ஒன்று ’இறுகப்பற்று’. இந்த படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு -ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் -அபர்ணதி மற்றும் ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஆகிய மூன்று தம்பதிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, அந்த பிரச்சனையால் ஏற்படும் தொடர் போராட்டம், அதன்பின் அந்த பிரச்சனைகளில் இருந்து இந்த தம்பதிகள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை சிறப்பாக திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கியிருந்தார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசை, கோகுல் பினாய் ஒளிப்பதிவு ஆகியவை மிகச் சிறப்பாக இருந்ததாகவும் இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் விமர்சனங்கள் வெளியாகின,

இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் மத்தியில், விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கருத்துக்கள் வெளிவந்த நிலையில் நடிகர் சூர்யாவும் தனது பங்கிற்கு இந்த படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

’இறுகப்பற்று’ படத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் ஒரு நல்ல கதை மீது நம்பிக்கை வைத்து படம் எடுத்துள்ளனர். இயக்குனர் யுவராஜ் மற்றும் படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நேற்று த்ரிஷா நடித்த ’தி ரோட்’, விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’ மற்றும் ’இறுகப்பற்று’ உள்பட ஒரு சில படங்கள் வெளியான நிலையில் நேற்று வெளியான படம் ஒன்றுக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான திரைப்படங்களில் ஒன்று ’இறுகப்பற்று’. இந்த படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு -ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் -அபர்ணதி மற்றும் ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஆகிய மூன்று தம்பதிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, அந்த பிரச்சனையால் ஏற்படும் தொடர் போராட்டம், அதன்பின் அந்த பிரச்சனைகளில் இருந்து இந்த தம்பதிகள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை சிறப்பாக திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கியிருந்தார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசை, கோகுல் பினாய் ஒளிப்பதிவு ஆகியவை மிகச் சிறப்பாக இருந்ததாகவும் இந்த படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்ததாகவும் விமர்சனங்கள் வெளியாகின,

இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் மத்தியில், விமர்சகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கருத்துக்கள் வெளிவந்த நிலையில் நடிகர் சூர்யாவும் தனது பங்கிற்கு இந்த படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

’இறுகப்பற்று’ படத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் ஒரு நல்ல கதை மீது நம்பிக்கை வைத்து படம் எடுத்துள்ளனர். இயக்குனர் யுவராஜ் மற்றும் படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment