மீண்டும் ஒரே படத்தில் சூர்யா - விக்ரம்.. 3 பாகங்கள்.. ரூ.1000 கோடி பட்ஜெட்?

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

பாலாவின் 'பிதாமகன்' திரைப்படத்தில் ஏற்கனவே சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தற்போது 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில், அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக இருக்கும் திரைப்படம் 'வேள்பாரி' நாவல் அடிப்படையிலான படமாக இருக்கும் என்றும், அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, ’வேள்பாரி’ படத்தில் யாஷ் உள்பட சில பான் இந்திய நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்பது குறித்து தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது சூர்யா மற்றும் விக்ரம் நடிக்க இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேள்பாரி கேரக்டரில் சூர்யா, பாண்டிய மன்னன் கேரக்டரில் விக்ரம் நடிப்பார்கள் என்றும், 'பொன்னியின் செல்வன்' போலவே இந்த படமும் பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் மூன்று பாகங்களாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், வேள்பாரி நாவல் தொடர்பான சில காட்சிகள் வேறு சில படங்களில் வெளியான நிலையில், அந்த காட்சிகளை நீக்க வேண்டும், இல்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் ஆண்டனிக்கு 4 நிமிடங்கள், சதீஷுக்கு 6 நிமிடங்கள்.. 2 வீடியோக்கள் வைரல்..!

நாளை கார்த்தியின் மெய்யழகன் உள்பட சில திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் இரண்டு படங்களின் முதல் சில நிமிட காட்சிகள் வெளியாகி, அந்த படங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்.. நன்றி சொன்ன கமல்ஹாசன்..!

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு, உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி.. இசைஞானியின் சூப்பர் அறிவிப்பு..!

பொதுவாக பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் தான் நடக்கின்றன என்ற நிலைமையில்,

மீண்டும் கார் ரேஸ் களத்தில் அஜித்.. உறுதி செய்த பிரபலங்கள்..!

நடிகர் அஜித் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: பிரபல மலையாள நடிகர் கைதாகி சில நிமிடங்களில் விடுதலை..!

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதன் காரணமாக