சூர்யாவின் 'புறநானூறு' படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புறநானூறு’ என்ற படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையும் படம் தான் ’புறநானூறு’ என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் ஜிவி பிரகாஷின் நூறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா தற்போது ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதால் அடுத்ததாக ’புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பில் ’புறநானூறு’ படத்தின் படப்பிடிப்புக்கு கூடுதல் நேரம் தங்களுக்கு தேவைப்படுவதாகவும் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிவது தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த படத்தை உங்களுக்கு சிறந்ததாக வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்று தெரியவந்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் சூர்யா நடிக்கும் பாலிவுட் திரைப்படமான ’கர்ணா’ படத்தின் படப்பிடிப்பில் விரைவில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல அது ஆண்களுக்கும் உரியது என்பதற்கு தகுந்த விளக்கம் அளித்த எழுத்தாளர் சாலின் மரியா லாரன்ஸ்.

முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்களுமே சண்டை போட்டு அவமானப்படுத்தப்பட்டு வாங்கி கொடுத்ததே இந்த மருத்துவ கல்வி.எனவே எல்லாமே இங்கு கஷ்டப்பட்டு தான் நாம் அடைந்துள்ளோம்‌.....

மதுரை சித்திரை திருவிழா 2024: பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் 12 நாள் பிரம்மாண்ட விழா

மதுரையின் இதயமாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான (2024) திருவிழா அட்டவணையை கோயில் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது.

கோவிலுக்கு யானை பரிசளித்த தேசிய விருது பெற்ற தமிழ் நடிகை.. அந்த யானையில் ஒரு டிவிஸ்ட்..!

பிரபல தமிழ் நடிகை கேரளா கோவிலுக்கு யானையை பரிசாக அளித்த நிலையில் அந்த யானையில் ஒரு ட்விஸ்ட் இருப்பதை அறிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

5 வயதில் பாலியல் தொல்லை.. இன்று அவனுக்கு பெண் குழந்தை இருக்குது: பிரபல நடிகையின் அதிர்ச்சி பதிவு..!

ஐந்து வயதில் தனது உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தற்போது அவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது என்றும் பிரபல நடிகை ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது

நான் வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல... 'குக் வித் கோமாளி' சீசன் 5 மாஸ் புரமோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் வருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்,