close
Choose your channels

'சூர்யா 45' ஒரு சாமி படமா? கதையை மாற்றிய ஆர்.ஜே. பாலாஜி?

Friday, October 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படம் ஒரு சாமி படம் என்று செய்தி வெளியாகியுள்ளது, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக ஆர்.ஜே. பாலாஜி ’மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கிய நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ’மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பதும், இதனால் ஆர்.ஜே. பாலாஜி, த்ரிஷாவை வைத்து ’மாசாணி அம்மன்’ என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த நிலையில், திடீரென சூர்யாவின் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே விஜய்க்கு சொன்ன கதையை தான் அவர் சூர்யாவுக்கு சொல்லி, அவரின் சம்மதம் பெற்றதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின் படி, ’மாசாணி அம்மன்’ திரைபடத்தின் திரைக்கதையை தான் சூர்யாவுக்காக மாற்றி உள்ளதாகவும், அம்மன் கேரக்டரை சூர்யாவுக்காக ஆண் தெய்வம் கேரக்டராக மாற்றி ’சூர்யா 45’ படத்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைக் போக போக தான் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment