close
Choose your channels

வாடிவாசலுக்கு முன்பே ஒரு படம்: வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் சூர்யா!

Tuesday, May 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா தற்போது ’சூர்யா 41’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்றும் இந்த படத்திற்கான சோதனை படப்பிடிப்பும் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வெற்றிமாறன் இன்னும் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பையே முடிக்காததால் ’வாடிவாசல்’ படத்தை தொடங்குவதற்கு முன்பு ஒரே மாதத்தில் ஒரு குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் உடன் மீண்டும் சூர்யா இணைய உள்ளதாகவும் இந்த படமும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது .

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளிவ்ந்திருக்கும் செய்தியால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment