வாடிவாசலுக்கு முன்பே ஒரு படம்: வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,May 03 2022]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா தற்போது ’சூர்யா 41’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்றும் இந்த படத்திற்கான சோதனை படப்பிடிப்பும் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வெற்றிமாறன் இன்னும் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பையே முடிக்காததால் ’வாடிவாசல்’ படத்தை தொடங்குவதற்கு முன்பு ஒரே மாதத்தில் ஒரு குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் உடன் மீண்டும் சூர்யா இணைய உள்ளதாகவும் இந்த படமும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது .

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பீம் படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளிவ்ந்திருக்கும் செய்தியால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பெப்சி தொழிலாளர்கள் குறித்து அதிரடி முடிவெடுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!

பெப்சி தொழிலாளர்களை பயன்படுத்துவது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபுதேவா: மாஸ் அறிவிப்பு

சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபுதேவா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷ்பு அம்மாவை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு என்பதும் தற்போது அவர் பாஜக பிரமுகராக உள்ளார் என்பதும் தெரிந்ததே.

'குக் வித் கோமாளி' பிரபலங்கள் அம்மு அபிராமி, புகழ் நடிக்கும் படம்: டைட்டில் அறிவிப்பு

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்டு

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் குறித்து சிம்ரன் என்ன சொன்னார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் குறித்து நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.