close
Choose your channels

ட்ரோன் மூலம் படமாக்கப்படும் 'சூர்யா 42': வைரல் புகைப்படம்!

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்.

ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய நான்கு கேரக்டரில் சூர்யா நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது சூர்யா மற்றும் திஷா பதானி சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை அருகே படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை படமாக்க ட்ரோன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ட்ரோனில் உள்ள கேமரா மூலம் இந்த படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ’சூர்யா 42' படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ட்ரோன் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆன பின்னர் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment