125 தொகுதிகளுடன் முன்னிலை… சர்வே முடிவுகளில் அசத்தும் அதிமுக!

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என தனியார் சர்வே முடிவு ஒன்று தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 3 ஆவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அந்த சர்வே முடிவு சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரம் பெற்று இருக்கிறது.

இந்நிலையில் Zion Research எனும் தனியார் சர்வே ஆய்வு முடிவு, தமிழகத்தில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் நிர்வாக திறனுக்காக கிடைத்த விருதுகள் மற்றும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த சர்வே முடிவு தெரிவித்து இருக்கிறது.

2021 இல் தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கப்போவது எந்த கட்சி என்று தமிழகம் முழுவதும் ஜியோன் ஆய்வு அமைப்பு எனும் தனியார் நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது. இந்த சர்வே முடிவுகள் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வெளிவந்துள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் 58,500 பேரை நேரில் சந்தித்து இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. இதில் அதிமுக 45% வாக்குகளை பெற்று 125 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவித்து உள்ளன.

அதே சமயம் 44% வாக்குகளுடன் 109 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் மக்களிடத்தில் பன்மடங்கு கூடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் முதலமைச்சர் பயன்படுத்தும் “நானும் ஒரு விவசாயி” என்பது மக்கள் மத்தியில் ஆழமாக பதித்து உள்ளதாக இந்த சர்வே சுட்டிக்காட்டி இருக்கிறது. அதோடு சமானியராக அனைவரிடமும் முதல்வர் பழகி வருவதாகவும் எளியவர் ஒருவர் முதல்வராக வந்து இருப்பதாகவும் மக்கள் தங்களது கருத்துகளை சர்வேயில் தெரிவித்து உள்ளனர். 2019 இல் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறி மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கும் மிகப் பெரிய அளவு கூடியள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் திறமையுடன் சிறப்பாக நிர்வாகம் செய்து வருவதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கியது மக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான மதிப்பை அதிகரித்து உள்ளது. மேலும் கஜா, நிவர் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டது, கொரோனாவை திறம்பட எதிர்கொண்டது ஆகியவை முதலமைச்சரின் திறமைக்கு சான்றாக தமிழக மக்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் மண்டல வாரியாக கட்சிகளின் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை சென்னை, டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களின் திமுகவும் முன்னிலை பெறும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசில் மக்கள் “மிக மகிழ்ச்சி“ என்று 41% மக்களும், “மகிழ்ச்சி“ என்று 26% மக்களும் தெரிவித்து உள்ளனர். இது தமிழக அரசின் “வெற்றி நடை போடும் தமிழகம்“ என்ற பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 42% பேர் ஸ்டாலின் என்றும் 41% பேர் எடப்பாடி பழனிசாமி என்றும் தெரிவித்து உள்ளனர். ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற பின்புலமும் பிம்பமும் உள்ளது. அதுவே எந்தவொரு பின்புலமும் பிம்பமும் இல்லாமல் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக இருந்து முதலமைச்சராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியை மக்கள் தங்களில் ஒருவராக பார்க்கின்றனர் என்பது இந்த சர்வே முடிவுகள் மூலம் புலப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

More News

எஸ்.எஸ்.ராஜமெளலி-மகேஷ்பாபு படம் குறித்து ஆச்சரிய தகவல் அளித்த பிரபலம்!

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய பிரம்மாண்டமான படங்களை எடுத்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும்

டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்-முதல்வர் எச்சரிக்கை!

பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவை அமமுக கட்சியினர் பல இடங்களில் மரியாதை செய்து வரவேற்றனர்.

டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடை பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 19 வயது வீராங்கனை… குவியும் பாராட்டு!

அசாம் மாநிலத்தின் சாருசஜாய் மைதானத்தில் 36 ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

'காதலர் தினத்தில்' கலக்கல் அறிவிப்பு: நயன் குறித்து விக்னேஷ் சிவன் டுவீட்

காதலர் தினத்தில் ஒரு கலக்கலான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது