சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து செல்லும் இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும் தொடங்கி ஒருசில மாதங்களில் முடிந்துவிடும் என்றும், வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர்  கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். 'அயன்' மற்றும் 'மாற்றான்' படத்திற்கு பின்னர் மீண்டும் இணையும் இந்த வெற்றிக்கூட்டணியின் படம் வரும் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் உலகின் முக்கிய 10 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவை எந்தெந்த நாடுகள் என்ற ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

More News

சிம்கார்டு இல்லாத செல்போனை பயன்படுத்துகிறாரா ப்ரியாவாரியர்?

ப்ரியா செல்போன் பயன்படுத்த அவரது தந்தை அனுமதிப்பதில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' சென்சார் தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஒருபக்கம் அரசியலில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருந்தாஅர்.

மேலாடையை கழட்ட சொன்ன இயக்குனர்: அதிர்ச்சியில் நடிகை

ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் ஒருவர் தன்னுடைய மேலாடைய கழட்ட சொல்லியதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் ஒரு அட்மின் டுவீட்: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டம்

சமிபத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்து பின்னர் அந்த பதிவு தனது அட்மின் தனது அனுமதியில்லாமல் பதிவு செய்ததாக கூறினார்.

இர்பான்கானுக்கு வந்த கொடிய நோய் இதுதான்

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் சமீபத்தில் தான் ஒரு நோயினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நோய் என்னவென்று ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்றும் கூறியிருந்தார்.