விக்னேஷ்சிவனின் திருமண பாடல்! நயன்தாராவை மனதில் வைத்து எழுதியதா?

  • IndiaGlitz, [Wednesday,June 28 2017]

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் கிசுகிசு எழுந்து வருகிறது. இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நயன்தாரா காதல் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், 'தற்போதைய நிலையில் எனது முழு கவனம் எனது பணியில் மட்டுமே உள்ளது' என்று கூறினார்.

ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் திருமணம் குறித்த பாடல் ஒன்றை அவர் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலில் உள்ள வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு போல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு இனிமையான திருமண நிகழ்ச்சியை மனதில் வைத்து இந்த பாடலை எழுதியுள்ளதாக அவர் கூறியது நயன்தாராவின் காதலை உறுதி செய்வது போல் உள்ளது.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், ரம்யாகிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளதாகவும், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

More News

இந்த எச்சைகள் எனக்கு தேவையே இல்லை. பிக்பாஸில் பொங்கிய காயத்ரி ரகுராம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி இப்போதுதான் சுவாரஸ்யத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது....

'பாகுபலி'யில் நடிக்காதது ஏன்? முதமுதலாக மனம் திறந்த ஸ்ரீதேவி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மிகப்பெரிய வெற்றி படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் முக்கிய கேரக்டரான ராஜமாதா சிவகாமி கேரக்டரில் முதலில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளிவந்தன...

பிக்பாஸில் புகுந்த அரசியல்: ஜூலியை ரவுண்டு கட்டிய ஆர்த்தி-காயத்ரி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் தற்போது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது...

கமல்ஹாசனின் பிக்பாஸ்: ஜூலியை வெளியேற்றினால் என்ன நடக்கும்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாள் சுமாராக போனாலும் நேற்றைய இரண்டாவது நாளில் கொஞ்சம் சூடுபிடித்தது. இதில் கலந்து கொண்ட 15 பேர்களில் பாடலாசிரியர் சினேகன் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ்: ஜல்லிக்கட்டு ஜூலியின் பேச்சால் விளைந்த விபரீதம்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இளம்பெண் ஜூலி.