சிவகுமார் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த அடுத்த நபர்

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவர்கள் இருவரின் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து வருவதோடு தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்து வருகிறது. மேலும் சிவகுமாரின் மருமகளும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகுமாரின் மகள் பிருந்தாவும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். ஆனால் இவர் நடிகையாக அறிமுகமாகாமல் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'Mr.சந்திரமெளலி என்ற படத்தில் பிருந்தா ஒரு பாடலை பாடியுள்ளார். பிருந்தா பாடிய Mr.சந்திரமெளலி என்று தொடங்கும் பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த பின்னணி பாடகி மரணம்

'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87

'காலா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 

குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல வட இந்திய சாமியார் ஆசாராம்பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவந்தது.

விஜய் ஆண்டனியின் 'காளி' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் திடீர் விலகல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் ஒன்றாகிய டெல்லி அணி