சூர்யாவின் 'S3' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

  • IndiaGlitz, [Saturday,July 16 2016]

கோலிவுட்டின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய சூர்யா தற்போது 'S3' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80% முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒருசில வசனக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கிவிட்டதாகவும், முதல்கட்டமாக இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை ரூ.41 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும், புதிய நிறுவனம் ஒன்று இந்த படத்தின் ரிலிஸ் உரிமையை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கு மாநிலங்களில் மிகப்பெரிய வியாபாரம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தமிழக ரிலீஸ் உரிமையைவிட தெலுங்கு மாநிலங்களின் ரிலீஸ் உரிமையின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சர்வதேச போலீஸ் அதிகாரியாக சூர்யாவும், அவருடைய மனைவியாக அனுஷ்காவும், பத்திரிகையாளராக ஸ்ருதிஹாசனும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆயுதபூஜை நாளில் அல்லது தீபாவளி நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஷ்ணுவின் 'மாவீரன் கிட்டு' உண்மைக்கதையா?

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் சமீபத்தில் பூஜை போடப்பட்ட 'மாவீரன் கிட்டு' படத்தின் படப்பிடிப்பு பழநி மற்றும்...

அஜித் படத்தில் அக்ஷராஹாசன்? மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்

தல அஜித் நடிக்கவுள்ள 'ஏகே 57' படத்தின் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

ரஜினியுடன் 2வது முறையாக இணைந்த மோகன்லால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தினம் நெருங்க நெருங்க ரசிகர்களிடம் டென்ஷன் ஏறிக்கொண்டே உள்ளது...

சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை'...

தனுஷின் 'வடசென்னை'யில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்

பிரபல நடிகர் விஜய்சேதுபதிக்கு தொடர்ச்சியாக சுமாரான வெற்றி படங்களே வெளிவந்து கொண்டிருந்த நிலையில்...