என்.ஜி.கே' ரிலீஸ் தினத்தில் ரசிகர்களுக்கு சூர்யாவின் மெசேஜ்!

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு அன்பான மெசேஜை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பே தவம். அன்பே வரம்.. வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்' என்று கூறியுள்ளார்.