பிறந்த நாள் விழாவில் ரசிகர்களுக்கு சூர்யா வைத்த வேண்டுகோள்

  • IndiaGlitz, [Saturday,July 23 2016]

நடிகர் சூர்யா இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இன்று தனது பிறந்த நாளின்போது ரசிகர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாடினார்.
சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் நிகழ்வில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சூர்யாவின் ரசிகர்கள் சுமார் 10,000 பேர்கள் வரை கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சூர்யா, பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் தனது ரசிகர்கள் ரத்ததானம், அன்னதானம் மரக்கன்று நடுதல் , கோவிலில் சிறப்பு பூஜை ஆகியவற்றை செய்து வருவதற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
மேலும் கல்வியின் அவசியத்தையும், மரம் நடுதலின் அவசியத்தையும், எடுத்து கூறிய சூர்யா, தன்னுடைய ஒவ்வொரு ரசிகர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
ஞானவேல்ராஜா, உள்பட பலர் கலந்து கொண்ட இந்த விழாவின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.