சூர்யா-விக்னேஷ் சிவனின் முதல் முயற்சி வெற்றி

  • IndiaGlitz, [Tuesday,November 22 2016]

'எஸ் 3' படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாள் அன்று தொடங்கியது என்பதையும் பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் விரைவில் நடைபெறவுள்ளது.
சூர்யா, கீர்த்திசுரேஷ், சரண்யா பொன்வண்ணன், கே.எஸ்.ரவிகுமார், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

More News

அல்லு அர்ஜுனுக்கு இன்று கிடைத்த இரண்டாவது புரமோஷன்

தமிழ் ரசிகர்களுக்கு 'ருத்ரம்மாதேவி' படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் விரைவில் பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

'கவலை வேண்டாம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

ஜீவா நடிப்பில் டிகே இயக்கிய 'கவலை வேண்டாம்' வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன். அமலாபால்

இந்த ஆண்டின் மிக ஹாட் செய்தி விஜய்-அமலாபால் பிரிவாகத்தான் இருக்கும். 'தெய்வத்திருமகள்' படத்தின்போது...

விரைவில் வருகிறது கூகுள் கண். கேமராவாக மாறும் கண்கள்

கண்பார்வை குறைபாடு உள்ளவர்களின் குறையை போக்க கண்தானம் செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விழிப்புணர்வு...

கத்திச்சண்டை' ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் நவம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது...