இன்று செவலியே கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறிய பிரபலங்கள்

  • IndiaGlitz, [Monday,August 22 2016]

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு இன்று கோலிவுட் திரையுலகினரும், நடிகர் சங்க நிர்வாகிகளும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவருடைய உடல்நிலை குறித்தும் அன்புடன் விசாரித்தனர்.
நடிகர் சங்க நிர்வாகிகளான பொருளாளர் கார்த்தி, ​​பொது செயலாளர் விஷால்​,​​ செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார் , நந்தா , ​ ஸ்ரீமன்​,A.L.உதயா ​​ ​மற்றும் நியமன குழு உறுப்பினர் ஹேம சந்திரன் ஆகியோர் இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
அதேபோல் பிரபு, ராம்குமார் உள்பட சிவாஜி கணேசன் குடும்பத்தினர்களும் கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினர். மேலும் நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமார் ஆகியோர்களும் கமல்ஹாசனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசன் பெற்ற விருது குறித்து சிவகுமார் கவிதையாக கூறியபோது,
செவாலியே என்ன, உலகின்
அனைத்துக் கலைஞர்களுக்கும் வழங்கும்
எல்லா விருதுகளுக்கும்
தகுதியான ஒரே கலைஞன்-
இன்று வாழும் கலைஞன்-
நீங்கள் ஒருவரே
என்று கூறினார்.
மேலும் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிகுமாரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.