சூர்யாவின் மிகப்பெரிய மனிதாபிமான உதவி

  • IndiaGlitz, [Tuesday,April 05 2016]

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'S3' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் அருகே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்தூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சமீபத்தில் சூர்யா தனது காரில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் இரவு நேரத்தில் கணவன் மற்றும் மனைவி விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாகவும், அதனை பார்த்த சூர்யா உடனே தன்னுடைய காரில் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


அந்த மருத்துவமனையில் முதலுதவி முடிந்தபின்னர் திருப்பதியில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அனுப்பும் வரையிலும் உடன் இருந்தாராம் சூர்யா.

சூர்யாவின் இந்த மிகப்பெரிய மனிதாபிமான உதவியால் விபத்துக்குள்ளான இரண்டு பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்ட செய்தி ஆந்திரா முழுவதும் வெகுவேகமாக பரபரப்புடன் பரவி வருகிறது.

More News

முதன்முதலாக 'காக்கிச் சட்டை' போடுகிறார் விக்டர் அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் முதன்முதலாக வில்லன் கேரக்டரில் நடித்து மீண்டும் கோலிவுட்டுக்கு ரீஎண்ட்ரி...

'கலகலப்பு' 2ஆம் பாகத்தில் ஆர்யா-நயன்தாரா?

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்...

ரஜினிக்கு சாக்லேட் சிலை வைத்த சென்னை பேக்கரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி' இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து...

ஒரே நேரத்தில் 2 மொழிகளில் அறிமுகமாகும் ப்ரியா ஆனந்த்

கோலிவுட் திரையுலகில் 'வாமனன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியா ஆனந்த் அதன் பின்னர் 180...

'தெறி' நாயகியின் புதிய அவதாரம்

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை சமந்தா, இளையதளபதி விஜய்யுடன் நடித்த 'தெறி'...