சமாதானம் செய்ய வந்த சூர்யா மீது போலீஸ் புகார்.

  • IndiaGlitz, [Tuesday,May 31 2016]

சென்னை அடையாறு அருகே உள்ள ஒரு சாலையில் பெண் ஓட்டுனர் ஒருவரும் கால்பந்தாட்ட வீரர் ஒருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த வந்த நடிகர் சூர்யா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் பின்வருமாறு
சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றதால் நிலைகுலைந்து போன அவர் காரின் பின்புறம் மோதியுள்ளார்.
காரின் பின்புறமும், மோட்டார் சைக்கிளின் முன்புறமும் சேதமடைந்ததால் காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அவ்வழியே வந்த நடிகர் சூர்யா இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமாதானப்படுத்த வந்த சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமார், தன்னை சூர்யா தாக்க வந்ததாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமாதானம் செய்ய வந்த சூர்யா மீது போலீஸ் புகார் அளிக்

More News

அனுஷ்காவின் அதிபயங்கர வில்லன் இவர்தான்....

அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வில்லன் ராணா என்பதும் அனைவரும் அறிந்ததே...

தனுஷின் அடுத்தடுத்த 4 படங்களின் முக்கிய தேதிகள்

தனுஷ் நடித்த 'தங்கமகன்' ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தனுஷின் அடுத்த படம் இன்னும் ரிலீஸ்...

முதன்முதலாக இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்-ஜி.வி.பிரகாஷ்

தமிழ் திரையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் பிரபலமாக உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இதுவரை ...

த்ரிஷா படத்தில் ஹாரிபாட்டர் டீம்

த்ரிஷா நடிக்கவுள்ள புதிய திகில் படத்திற்கு 'மோகினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்...

காஷ்மோரா'வுக்கு கார்த்தி-விவேக் கொடுத்த ஒத்துழைப்பு

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி வரும் 'காஷ்மோரா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....