'சிங்கம்' படத்தை எதிர்பார்த்து வரவேண்டாம். 'பசங்க 2' பிரஸ்மீட்டில் சூர்யா

  • IndiaGlitz, [Tuesday,December 22 2015]

இயக்குனர் பாண்டியராஜ் இயகத்தில் சூர்யா, அமலாபால் நடித்த 'பசங்க 2' திரைப்படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, 'முதலில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுத்த அத்தனை முகம் தெரியாத நபர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறுவதாக கூறினார்.

இந்த படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜனின் உழைப்பு அளவிட முடியாதது என்றும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேல் இந்த படத்தின் திரைக்கதைக்காக அவர் உழைத்துள்ளார். என்றும் கூறினார்.

மேலும் இந்த படம் குழந்தைகளுக்காக மட்டுமே கடின உழைப்பால் உருவான படம். குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளை பற்றியும் அவர்களின் பிரச்சனைகள் பற்றியும் கலகலப்பாக பாண்டிராஜ் கதை கூறியுள்ளார். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்த படத்தில் கண்டிப்பாக இருக்கும். அதே நேரத்தில் இந்த படத்தை 'சிங்கம்', 24 போன்ற படங்களை போல எதிர்பார்த்து வரவேண்டாம் என்றும் சூர்யா கூறினார்.

More News

பொங்கல் போட்டியில் இருந்து விலகியது அரண்மனை 2'

ஜனவரியில் வரும் பொங்கல் திருநாளில் நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த நாளில் படத்தை வெளியிட பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். 2016...

6,000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'பாஜிராவ் மஸ்தானி

ரன்வீர்கபூர், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' கடந்த வெள்ளியன்று...

சுசீந்திரனின் அடுத்த படத்தில் உதயநிதி?

ஒருகல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் அதன்பின்னர் 'நண்பேண்டா'...

தமன்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கி வரும் நடிகை தமன்னா இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.....

ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நடிகை, பாடகி, இசையமைப்பாளர், டான்சர் என பல அவதாரங்களில் வலம்வரும் ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....