சூர்யாவின் திடீர் மாற்றத்திற்கு நயன்தாரா காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,September 13 2016]

ரஜினியின் 'கபாலி' இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக ரஞ்சித் அறிவித்தார். சிங்கம் 3' படத்தை அடுத்து சூர்யா, ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 'கொம்பன்' முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியை இயக்குனர் முத்தையாவும் உறுதி செய்தார்.
இந்நிலையில் சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு நயன்தாராவே காரணம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் சூர்யாவை சந்தித்த நயன்தாரா விக்னேஷ் சிவனின் கதையை கேட்டு அந்த கதை பிடித்தால் கால்ஷீட் தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் இதன்படி கதை கேட்ட சூர்யா, விக்னேஷ் சிவன் கூறிய கதை பிடித்துவிட்டதால் உடனே பச்சை கொடியை காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

காவிரி போராட்டக்காரர்களுக்கு பிரகாஷ்ராஜின் வேண்டுகோள்

சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெங்களூர் ...

நயன்தாரா படத்தில் கெளதம்மேனன் வில்லனாக நடிப்பது உண்மையா?

டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

காவிரி பிரச்சனையில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிம்பு அறிக்கை

காவிரி நீர் பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் ஒற்றுமைக்கு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சனையை பயன்படுத்தி ஒருசிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

'சாமி 2'-க்கு முன்னர் விக்ரம் நடிக்கும் புதிய படம்

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'இருமுகன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் கடந்த நான்கு நாட்களாக உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வெற்றிப்படம் என்பதை உறுதி செய்துள்ளது.

முருகதாஸ் படத்தில் மகேஷ் பாபுவுக்கு என்ன வேடம்? தகவல்கள் உள்ளே

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது