முடிவுக்கு வந்தது சூர்யாவின் '24'

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்த 'பசங்க 2' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சூர்யா நடித்து கொண்டிருந்த மற்றொரு படமான '24' படமும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

'யாவரும் நலம்', மனம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த வந்த '24' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு போலந்து நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை சூர்யா, சமந்தா ஆகியோர் தங்கள் சமூகவலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் டிசம்பர் அல்லது பொங்கல் திருநாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.