அஜித் - பிரசாந்த் நீல் சந்திப்பு உண்மையா? சுரேஷ் சந்திரா அளித்த முக்கிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,July 27 2024]

கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவரை நடிகர் அஜித் சமீபத்தில் சந்தித்ததாகவும் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த படத்தின் கதை ‘கேஜிஎப் 3’ படத்துடன் கனெக்சன் ஆகும் என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அஜித் மற்றும் பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் சந்தித்தது உண்மைதான் என்றும் ஆனால் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் இந்த சந்திப்பின் போது இருவரும் இணைந்து ஒரே படத்தில் பணிபுரிவதாக எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் இருவரும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்றும் அவர் கூறினார்.

சுரேஷ் சந்திராவின் இந்த விளக்கத்தை எடுத்து அஜித் - பிரசாந்த் நீல் படம் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களையும் முடித்த பிறகு அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.