இனிமேல் இதுதான் டிரெண்ட்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

இனிமேல் இதுதான் டிரெண்ட் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித், ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் பயணம் செய்வது, கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ் ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பந்தயத்திற்காக அவர் பயிற்சி பெறும் வீடியோக்களும் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தை பக்கத்தில் கார் பந்தயத்திற்காக அஜித் தன்னை தயார் செய்து கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ஒரு புதிய ஹெல்மெட்டையும் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் வெள்ளை சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ஹெல்மெட் டிரெண்ட் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

More News

ரஜினியின் 'வேட்டையன்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்'  திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும்

நடிகர் விஜய் அடுத்த படம் நடிப்பாரா.? Tarot Reading சொல்வெதென்ன..?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பிரபல டாரோ கார்ட் ரீடர் சாரா அவர்கள் அளித்த பேட்டி, டாரோ கார்ட் ஆஸ்ட்ராலஜி உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.

ஒரு படத்தில் 5 தயாரிப்பாளர்கள்.. 5 பேருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஸ்ருதி ஹரி கூறிய அதிர்ச்சி தகவல்..!

ஒரு தமிழ் திரைப்படத்தை 5 தயாரிப்பாளர்கள் தயாரித்தார்கள் என்றும் அந்த 5 பேருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள் என்றும் நடிகை ஸ்ருதி ஹரி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை விட்டு செல்கிறாரா ஜெயம் ரவி? வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி சென்னையை விட்டு செல்வதாகவும் அவர் மும்பையில் செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருமையான சினிமா ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உருவாகிறது.. நன்றி சொன்ன சூர்யா

ஒரு அருமையான சினிமா அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் சூர்யா இன்று வெளியான 'மெய்யழகன்' படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.