'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..!

  • IndiaGlitz, [Friday,August 16 2024]

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டை சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த அப்டேட்டை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் தற்போது ஒரே நேரத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடந்த போது காலையில் மாலையில் என மாறி மாறி இரண்டு படங்களிலும் அஜித் நடித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று முக்கிய அப்டேட் வெளியாக போவதாக சுரேஷ் சந்திரா அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பில் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் நிகில் நாயர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அஜித் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்லோருக்கும் தெரிந்த நிகில் நாயர் ’விடாமுயற்சி’ படத்தில் இணைகிறார் என்ற அப்டேட் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

More News

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..விருதுகளை அள்ளிய மணிரத்னம் , தனுஷ் படங்கள்..!

70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

'தளபதி 69' படம் இயக்குவதை உறுதி செய்த எச் வினோத்.. அரசியல் படமா?

தளபதி விஜய் நடிக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்ற நிலையில் நேற்று நிகழ்ச்சி

தமிழில் மொழிபெயர்ப்பு.. புதிய முயற்சியை அறிவித்த கமல்ஹாசன்.. அனைத்தும் இலவசம்..!

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் 'மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்' நடத்துகிறது என கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்

'கோட்' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்.. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில்

'சூர்யா 44' படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் விசாரணையா? என்ன காரணம்?

'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு திடீரென போலீசார் விசாரணை செய்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.