எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

எஸ்.வி சேகர் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது

முன்னதாக எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையை அடுத்து எஸ்.வி.சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சமூக விரோதிகள் விவகாரம்: ரஜினி மீது வழக்கு தொடர நாம் தமிழர் கட்சி முடிவு

தூத்துகுடி போராட்டம் கலவரமாக மாற சமூக விரோதிகளே காரணம் என்றும், போலீசை சமூக விரோதிகள் அடித்ததால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டி

சரத்குமாரிடம் 'யார் நீங்க' என்று ஏன் கேட்கவில்லை: சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்றிருந்தபோது சந்தோஷ் என்ற வாலிபர் அவரை பார்த்து 'யார் நீங்க' என்று கேள்வி எழுப்பினார்.

என் நோக்கத்தை மீடியா திரித்துவிட்டது: 'யார் நீங்க" கேள்வி கேட்ட சந்தோஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் எ

ரஜினிக்கு ஆதரவான கருத்தா? விஜய்சேதுபதி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

கார்த்தியின் 'தேவ்' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.