'கபாலி' ரிலீசுக்கு முன்னர் ரஜினி சென்னை திரும்புவாரா?

  • IndiaGlitz, [Thursday,July 07 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படம் நாளை சென்சார் செய்யப்படும் என்றும் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அனைத்து வியாபாரங்களும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதியை சென்சார் முடிந்ததும் தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஜூலை முதல்வாரம் சென்னை திரும்புவார் என்று ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி இம்மாத இறுதியில்தான் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் அடுத்த மாதம் முதல் அவர் '2,0' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
எனவே 'கபாலி' திட்டமிட்டபடி வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆனால், ரிலீஸ் தேதியில் ரஜினி அமெரிக்காவில்தான் இருப்பார் என்றும் ரிலீசுக்கு பின்னரே அவர் சென்னை திரும்புவார் என்றும் தெரிகிறது.

More News

இன்று முதல் மீண்டும் ஒன்றுசேரும் ஜோடி

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜெய் மற்றும் பிரபல அஞ்சலி நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்'...

நாசர் குடும்பத்திற்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் ரம்ஜான். எப்படி?

பிரபல நடிகர் நாசர் தனது குடும்பத்துடன் நாளை ரம்ஜான் திருநாளை கொண்டாடவுள்ளார். அவருக்கு இப்பொழுது முதலே திரையுலகினர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

உதயநிதியுடன் ஜோடி சேர்ந்த சிம்பு நாயகி

அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம்...

விக்ரம் பிரபு தயாரிக்கும் முதல் படத்தில் 'கபாலி'யின் கனெக்ஷன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தை தயாரித்துள்ளார்...