4 நாள் வேலையை ஒரே நாளில் முடித்த ரஜினி

  • IndiaGlitz, [Sunday,February 21 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்து ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிவிட்டதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டதாகவும் ,அதற்கு ரஜினியின் சுறுசுறுப்பான எனர்ஜிதான் காரணம் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.


மலேசியாவில் சமீபத்தில் ஒருசில முக்கிய காட்சிகளை நான்கு நாட்கள் படமாக்க இயக்குனர் ரஞ்சித் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் ரஜினியின் சுறுசுறுப்பு காரணமாக அந்த காட்சிகள் ஒரே நாளில் படமாக்கி முடிக்கப்பட்டதாம். ரஜினியின் ஒத்துழைப்பையும் ஒவ்வொரு காட்சியையும் அவர் ஒரே ஷாட்டில் முடித்த விதத்தையும் பார்த்து படக்குழுவினர் அசந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.