ரஜினி பட லொகேஷனில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

'ரெமோ' படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' பட டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மோகன் ராஜா இயக்கி வரும் இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது 'வேலைக்காரன்' படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்லவுள்ளனர். இந்த தகவலை இயக்குனர் மோகன்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் பெரும்பகுதி மலேசியாவில்தான் படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

இந்த படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது.

More News

தினகரன் கைது! அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தினகரன் கைதான சில மணி நேரத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா குடும்பத்தினர்களின் முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருந்தது...

தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது...

பிரபல இயக்குனர் - ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென காலமானார். அவர் கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்தாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிகிறது...

டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை செய்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்துள்ளனர்.