ரஜினியின் '2.0'ஐ முந்துகிறதா 'காலா'

  • IndiaGlitz, [Wednesday,June 28 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட்டில் பிரமாண்டமான ராட்சத பலூன் பறக்க வைத்து புரமோஷன் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா' திரைப்படம் வரும் ஜனவரி 15 பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால், '2.0' திரைப்படம் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்து இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்தே இந்த தகவல் உறுதி செய்யப்படும். எது எப்படியோ, அடுத்த ஆண்டு இரண்டு ரஜினி படங்கள் வெளியாவது உறுதி என்பது மட்டும் உண்மை என்பதால் ரஜினி ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர்.

More News

விக்னேஷ்சிவனின் திருமண பாடல்! நயன்தாராவை மனதில் வைத்து எழுதியதா?

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் கிசுகிசு எழுந்து வருகிறது. இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை...

இந்த எச்சைகள் எனக்கு தேவையே இல்லை. பிக்பாஸில் பொங்கிய காயத்ரி ரகுராம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி இப்போதுதான் சுவாரஸ்யத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது....

'பாகுபலி'யில் நடிக்காதது ஏன்? முதமுதலாக மனம் திறந்த ஸ்ரீதேவி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் மிகப்பெரிய வெற்றி படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் முக்கிய கேரக்டரான ராஜமாதா சிவகாமி கேரக்டரில் முதலில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளிவந்தன...

பிக்பாஸில் புகுந்த அரசியல்: ஜூலியை ரவுண்டு கட்டிய ஆர்த்தி-காயத்ரி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் தற்போது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது...

கமல்ஹாசனின் பிக்பாஸ்: ஜூலியை வெளியேற்றினால் என்ன நடக்கும்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாள் சுமாராக போனாலும் நேற்றைய இரண்டாவது நாளில் கொஞ்சம் சூடுபிடித்தது. இதில் கலந்து கொண்ட 15 பேர்களில் பாடலாசிரியர் சினேகன் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.