பரிசுக்கு பதிலாக கொரோனா வைரஸை வழங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா… பரிதாப சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

 

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த விழாவின்போது கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்களை கொடுப்பார் என குழந்தைகள் அனைவரும் ஆவலாக காத்து இருப்பர். அதோடு உறவினர்கள் அனைவரும் பரிசு பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர்.

இந்நிலையில் பெல்ஜியத்தில் இயங்கி வரும் ஒரு ஆதரவு இல்லத்தில் தங்கி இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சாண்டா கிளாஸை வரவழைத்து ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆண்ட்வெர்பின் ஹொமல் ரிஜ்க் எனும் பெயர்க்கொண்ட அந்த ஆதரவு இல்லத்திற்கு வந்த சாண்டா கிளாஸ் அங்குள்ளவர்களுக்கு பரிசு பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கி குஷிப் படுத்தினார். இதனால் மன அழுத்ததில் இருந்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சாண்டா கிளாஸ் ஆதரவு இல்லத்தை விட்டு சென்றவுடன் இல்லத்தில் இருந்து சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சாண்டா கிளாஸ் வேடம் அணிந்தவருக்கும் உடல்நல பாதிப்பு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் ஆதரவு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்தச் சோதனையில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 14 பேர் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘

இந்நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தார் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சிறந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதே எனவும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

More News

கல்யாணத்தில் டான்ஸ்… கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம்!!!

உத்திரப்பிரேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய கல்யாணத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்வால் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்.

ரஜினி கட்சியின் பெயர் இதுதானா? தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மாஸ் சின்னம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31-ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்ற

போட்டியாளர் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர்: அர்ச்சனா தப்பிச்சுடுவாரா?

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க்கில் போட்டியாளர் கோழி மற்றும் நரியாக மாறுகின்றனர். இந்த டாஸ்க்கின் படி கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை

நள்ளிரவில் கைதான நடிகை சித்ரா கணவர்: தற்கொலைக்கான காரணம் கண்டுபிடிப்பு?

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் விட்டால் ரத்து செய்யப்படுமா??? எச்சரிக்கை அறிவிப்பு!!!

கொரோனாவுக்கு இடையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தியது