சிறுத்தை சிவாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் தங்களது பகுதியில் டப்பிங் பணியை முடித்த நிலையில் தற்போது பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த நிலையில் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து திரையுலகினர் மற்றும் 'அண்ணாத்த’ படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் 'அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்து சிறுத்தை சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் கேக் எடுத்து சிவாவுக்கு ஊட்டிவிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் டி இமான் இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜாக்கிரதை மக்களே! மீண்டும் உச்சம் தொடும் சென்னை!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் முழுவதும் குறைந்து வந்தது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்ளிட்ட

தல அஜித்தின் வேற லெவல் வீடியோ: இணையதளத்தில் வைரல்!

தல அஜித்தின் வேற லெவல் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி: 10 நாட்களுக்கு பின் என்ன செய்தார் தெரியுமா?

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த நிலையில் பத்து நாட்கள் கழித்து போலீசில் சரண் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

5 சிறுநீரகங்களுடன் வாழும் அதிசிய மனிதர்....!

வங்கதேசத்தை சேர்ந்தவர் தான் 41 வயதுடைய தீபன் என்ற தொழிலதிபர்.  இவர் சிறியவராக இருக்கும்போதே சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தினால்,

நிலச்சரிவினால் மண்ணிற்குள் புதைந்த அரசுப் பேருந்து… பதற வைக்கும் கோரக்காட்சி!

இமாச்சல் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.