இமயமலைக்கு செல்லும் முன் பேட்டியளித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இன்று அவர் இமயமலை செல்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அவர் இமயமலை செல்லவில்லை. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அவர் மீண்டும் இமயமலை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இமயமலை செல்லும் முன் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது நான்கு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான இமயமலை செல்வதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தன்னால் சில ஆண்டுகளில் இமயமலை செல்ல முடியவில்லை என்றும் கூறினார்.

மேலும் ’ஜெயிலர்’ திரைப்படம் எப்படி வந்துள்ளது? உங்கள் கேரக்டர் எப்படி அமைந்துள்ளது? என்ற கேள்விக்கு ’நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்று அவர் தனக்கே உரிய சிரிப்புடன் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று சில நாட்கள் அங்கு ஆன்மீக பயணம் செய்த பின்னர் சென்னை திரும்புவார் என்றும் அவர் திரும்பிய பிறகுதான் தான் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.