சென்னை வந்ததும் ரஜினிகாந்த் செய்த முதல் பணி: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. மேலும் விரைவில் அவர் ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அதனை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்றும் நமது தலைவர் தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் இன்று அவர் முதல் பணியாக தடுப்பூசி எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.