நடிகர் தவசியிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது என்ன?

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல திரைப்படங்களில் கிராமத்து கேரக்டர்களில் நடித்து அசத்திய நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திமுக எம்எல்ஏ சரவணன் அவர்கள் தனது டிரஸ்டின் மூலம் இலவசமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் நடிகர் தவசிக்கு நிதி உதவி தேவைப்படுவதை அறிந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரமும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரமும் முதல் கட்டமாக அளித்தனர். மேலும் நேற்று நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாயை தனது நண்பர் மூலம் நேரடியாக தவசிக்கு வழங்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசினார். அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சை முறை குறித்தும், தற்போதைய அவருடைய நிலை கேட்டறிந்ததோடு, விரைவில் நீங்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தொலைபேசியில் பேசி தவசி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து இருப்பது அவரது குடும்பத்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

More News

விபத்தில் சிக்கிய குஷ்பு ! 

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ அக்கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நடிகர் தவசிக்கு சிம்பு அளித்த மிகப்பெரிய தொகை!

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் தவசி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பார்.

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அளித்த பரிசு என்ன தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணியிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள்

இதுதான் லவ்லி ப்ரிவெட்டிங் போட்டோஷூட்: ஆபாச தம்பதிகளுக்கு சாட்டையடி!

கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு முந்தைய ப்ரிவெட்டிங் போட்டோஷூட் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதிலும் ஒரு சிலரின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்

குழந்தை வரத்துக்காக மனித நுரையீரலை வைத்து சடங்கு… மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக ஒரு தம்பதி சிறுமி ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் நுரையீரலை அகற்றிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.