தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் வி.ஏ துரையிடம் போனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜயகாந்த் நடித்த ’கஜேந்திரா’ விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து, தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் இருப்பினும் தனது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படுவதால் திரையுலகினர் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தயாரிப்பாளர் விஏ துரையின் மருத்துவச் செலவுக்காக நடிகர் சூர்யா 2 லட்சம் வழங்கினார் என்ற தகவல் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஏ துரையிடம் போனில் பேசி ஆறுதல் கூறியுள்ளார்
நான் இருக்கின்றேன், பார்த்து கொள்கிறேன், கவலைப்படாதீர்கள், விரைவில் நேரில் உங்களை சந்திக்கிறேன் என உடல்நல குறைவால் தவிக்கும் விஏ துரையிடம் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments