சரத்பாபு முன் எப்போதும் இதை செய்ய மாட்டேன்.. அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று சென்னைக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சரத்பாபு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது ’சரத்பாபு எனது மிகவும் நெருங்கிய நண்பர், அவர் என்னுடன் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே முக்கியமானது. குறிப்பாக முத்து, அண்ணாமலை ஆகிய படங்கள் மிக முக்கிய படங்கள்.

என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு மரியாதை இருந்ததால் அவர் முன் நான் எப்போதும் சிகரெட் பிடிக்க மாட்டேன். சிகரெட் பிடித்து உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம், ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று அவர் சொல்லுவார். அதனால்தான் அவர் முன் நான் சிகரெட் பிடிப்பதில்லை

’அண்ணாமலை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய டயலாக் பேசுவதற்கு 15 டேக் மேல் சென்று கொண்டிருந்தது. அப்போது எனக்கு சரியாக நடிக்க வராத போது அவர்தான் எனக்கு எமோஷனலாக அழகாக நடித்துக் காட்டினார்’ என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக நேற்று சரத்பாபு மறைவு குறித்த செய்தி வெளியானவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருந்ததாவது: இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

More News

அனிருத் அட்டகாசமாக கம்போஸ் செய்த 'இந்தியன் 2' பாடல்.. வைரல் வீடியோ..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில்

ஜப்பான் ஒசாகா விருது… சிறந்த நடிகர் விஜய், விஜய்சேதுபதி என விருது பெறும் முக்கிய பிரபலங்கள்!

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘ஒசாகா சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு அதில் சிறந்த நடிகர்,

'விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது? அஜித் ரசிகர்களுக்கு செம்ம குஷியான தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'விடாமுயற்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில்

'ஆர்.ஆர்.ஆர்' நடிகர் காலமானார்.. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இரங்கல்...!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அந்த இயக்குனர் இன்னும் 40 வருஷங்கள் படம் இயக்குவார்.. மிஷ்கின் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் 'அந்த இயக்குனர் இன்னும் 30 முதல் 40 வருடங்களுக்கு படத்தை இயக்குவார்' என வாழ்த்து தெரிவித்திருப்பது கோலிவுட் திரையுலகினர்களை