என்கவுண்டர்ங்கிற பேருல கொலை பண்றதுதான் ஹீரோயிஸம்? 'வேட்டையன்' டீசர்..!

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டீசரில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேட்டையனை பற்றி, அமிதாப்பச்சன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்யும் காட்சிகளுடன் தொடங்குகிறது.

இந்த நாட்டில் லட்சக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் இருக்கும்போது, இவரை மட்டும் அடையாளம் தெரிகிறது. எப்படி இது? என்று அமிதாப் பச்சன் கேட்க, ரித்திகா சிங் அவர் மிகவும் பயங்கரமான போலீஸ் ஆபீசர்; தைரியமாக அவர் என்கவுண்டர் செய்வதால், அவர் ஞாபகம் வைக்கப்படுகிறார் என்று பதிலளிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, ‘வேட்டையன்’ தவறு செய்பவர்களை என்கவுண்டர் செய்யும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. எஸ்பிங்கிற பேருல ஒரு எமன் வந்திருக்கான் என்று வில்லன்கள் அதிர்ச்சி அடைய, அப்போது வில்லன்களில் ஒருவர் நம்ம ஊர்ல நாலு பப்ளிக்கை கொலை பண்ணினா, அந்த எஸ்பியை டிரான்ஸ்பர் பண்ணிவிடுவாங்க என்று சொல்கிறார்.

என்கவுண்டர் என்ற பெயரில் கொலை பண்ணும் போது தான், ஹீரோயிசமா? என அமிதாப் கேட்க, அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினிகாந்த், என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல; இனிமேல் இது மாதிரி குற்றம் நடக்கக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுவதுடன் இந்த டீசர் முடிவடைகிறது. மொத்தத்தில், இந்த டீசர் ‘வேட்டையன்’ படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'வேட்டையன்' அமிதாப்புக்கு ஏஐ டெக்னாலஜி மூலம் பின்னணி குரலா? யார் பேசியது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது

காட்டுல புலி வரும்போது காடே சைலண்ட் ஆயிரும்: 'பேட்ட ராப்' டிரைலர்..!

பிரபுதேவா நடித்த "பேட்ட ராப்" என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜானி மாஸ்டர் கைது விவகாரம்.. அவரது மனைவி சொன்னது என்ன தெரியுமா?

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி தன்னுடைய உதவி நடன இயக்குனர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள

⚜️வேல் மாறல் மகா மந்திரம் படிப்பது எப்படி.? மந்திரத்தின் சக்தி மற்றும் பயன்கள் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

வேல் மாறல் மகா மந்திரம்: முருகனின் சக்தி மற்றும் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

கொழுந்துவிட்டு எரியும் பிரியங்கா விவகாரம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மணிமேகலை..!

ஒரு பக்கம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா சம்பந்தப்பட்ட விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தனது கணவருடன்