'தலைவர் 172' படத்தை தயாரிப்பது இவரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 172வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று பல கோலிவுட் பிரபலங்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது திரைப்படமான ’வேட்டையன்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்றும் அவருடைய அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்தது.

இந்நிலையில் ரஜினியின் ’தலைவர் 172’ படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியவாலா என்பவர் தயாரிக்க இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’ரஜினிகாந்த் அவர்களுடன் இணைவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் இது எனக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஜினியின் ’தலைவர் 172’ படத்தை அவர்தான் தயாரிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியவாலா பாலிவுட்டில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்து உள்ளார் என்பதும், குறிப்பாக ’ஹவுஸ் ஃபுல்’ படத்தின் ஐந்து பாகங்களை தயாரித்ததும் ’பாகி’ படத்தின் மூன்று பாகங்களை தயாரித்ததும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழுக்கு முதல் முறையாக என்ட்ரியாகும் இவரது முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தயாரிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

நேற்று வெளியான வீடியோ குறித்த லேட்டஸ்ட் செய்தி.. ஏமாற்றத்தில் சிம்பு ரசிகர்கள்..!

நேற்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் இந்த வீடியோ அவர் நடிக்க இருக்கும் 'எஸ்டிஆர் 48' 'படத்தின் வீடியோ என்று அனைவராலும்

ஆடி காரில் வந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஏஆர் ரஹ்மான்: காரணம் இதுதான்..!

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்ய  ஆடி காரில் வந்த  ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கு திரும்பும் போது ஆட்டோவில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணையும் 'ஜெய ஜெய ஜெய ஜெயஹே' நாயகி..!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

வெறும் 50 ஆயிரம் ரூபாயில் சின்மயி பிரச்சனையை முடித்த லோகேஷ் கனகராஜ்.. எப்படி தெரியுமா?

வெறும்  50 ஆயிரம் ரூபாயில் சின்மயி குறித்த பிரச்சனையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னால் 20 நிமிடம் கூட இருக்க முடியவில்லை.. அவர் எப்படி 11 வருடங்கள் இருந்தாரோ? பிரபல இயக்குனர்..!

சாவர்க்கர் இருந்த சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை என்றும் அவர் எப்படி 11 வருடங்கள் அந்த சிறையில் இருந்தார் என்றே தெரியவில்லை என்றும் சாவர்க்கர் வாழ்க்கை