மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' அருவி இயக்குனர் கூறியது ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

கடந்த வாரம் வெளியான ;'அருவி' திரைப்படம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்கு வெகுசிலரை தவிர அனைவருமே பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால் படத்தின் வசூலும் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு உயர்ந்துள்ளது.

இந்த படத்தை கோலிவுட் பிரபலங்களான இயக்குனர் ஷங்கர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ரவி உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் அனைத்து ஊடகங்களும் 4 ஸ்டார்களுக்கும் மேல் இந்த படத்திற்கு கொடுத்து கொண்டாடி வருகின்றன.

இந்த நிலையில் நல்ல படங்கள் வெளியாகும்போது மனம் திறந்து பாராட்டும் பண்பை வழக்கமாக கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் 'அருவி' படத்தை பார்த்து வியந்துள்ளார். அவர் இயக்குனர் அருண்பிரபுவுக்கு தொலைபேசி மூலம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அருண்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.

More News

ஓகி புயலால் திசைமாறிய 30 குமரி மீனவர்கள் கரை சேர்ந்த அதிசயம்

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர்.

தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களை உற்சாகப்படுத்திய சச்சின் தெண்டுல்கர்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களில் ஒன்றாகிய எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர்,

பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆகிவருவது பிட்காயின். இந்தியாவை பொறுத்தவரையில் பொருளாதார அறிவு பெற்றவர்கள் கூட பிட்காயின் குறித்து தெரியாத நிலை

த்ரிஷா வழங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விருந்து

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று த்ரில் படமான 'மோகினி

அருவியும் ஆஸ்மாவும் ஒரே கதையா?

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படத்தில் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில்