ரஜினியின் நெருங்கிய நண்பர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவித்து டுவிட்

  • IndiaGlitz, [Friday,January 06 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியுமான விஎம் சுதாகர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென காலமானார். இதனை அடுத்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக ஆரம்பத்தில் அவரது சகோதரர் சத்தியநாராயணா செயல்பட்டு வந்த நிலையில் விஎம் சுதாகர் என்பவரை ரஜினிகாந்த் ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக நியமனம் செய்தார். அன்று முதல் பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக விஎம் சுதாகர் செயல்பட்டு வந்தார் என்பதும் ரஜினி ரசிகர் மன்றம்,ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றப்பட்ட போதும் அவர் தலைமை நிர்வாகியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஎம் சுதாகர் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் முழு செலவையும் ரஜினிகாந்த் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் விஎம் சுதாகர் காலமானார். அவருக்கு வயது 71 என்றும் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆக்சன் கிங் அர்ஜூனின் இரண்டாவது மகளா இவர்? செம கிளாமர் புகைப்படங்கள்!

 ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அர்ஜூனின் மகளா இவர்? என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 

பிரபல நடிகருக்கு நெஞ்சுவலியா? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகருக்கு நெஞ்சுவலி என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில்

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'விக்ரம் வேதா' உள்பட இந்த வார ஓடிடி திரைப்படங்கள்: முழு லிஸ்ட்

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் சுமார் நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியிலும் ஏராளமான படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகி வருகிறது என்பது ரசிகர்களுக்கு

'சூர்யா 42' படத்தின் சூப்பர் தகவல்.. ரசிகர்களுக்கு செம விருந்து!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சூர்யாவுடன், திஷா பதானி, யோகிபாபு, ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர்

த்ரிஷாவின் 3ஆம் வகுப்பு ரேங்க் கார்டு.. எவ்வளவு க்யூட்டாக இருக்கின்றார் பாருங்கள்!

தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவர் மட்டுமே. இவர்களில் த்ரிஷாவின் மூன்றாம் வகுப்பு ரேங்க் கார்டு