'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு: நாளை கிளம்புகிறார் ரஜினி!

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் மேற்கு வங்கத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் நாளை மேற்கு வங்கம் செல்ல இருப்பதாகவும் அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேற்குவங்கத்தில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் நான்கு நாட்கள் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் அவர் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலுக்கு இனி வரப்போவது இல்லை என உறுதிபட நேற்று தெரிவித்த ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்தடுத்து ரஜினியின் படங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

More News

அஜித்தின் 'வலிமை' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எந்த நாட்டில்?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு எங்கே என்பது குறித்த

விஷாலின் 'எனிமி' படம் குறித்த சூப்பர் அப்டேட் தந்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர்!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்திவரும் 'எனிமி' திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக

ரஜினி ரசிகர்களே இனி அவரை நம்பமாட்டார்கள்.....! பிரபல பத்திரிக்கையாளர்....!

ரஜினி இனிமேலும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொன்னால், அவரது ரசிகர்களே அவரை நம்ப மாட்டார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எப்போது? தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்

சைக்கிளுக்கு மாறிய த்ரிஷா: பெட்ரோல் விலை உயர்வு காரணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 1999ஆம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தின் மூலம் சிறு கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின் 2002ஆம் ஆண்டு 'மௌனம் பேசியதே'