10 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பாடகர்களை திரையுலகிற்கு தந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்து கொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களை கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக கலந்துகொள்ளும், இசையமைப்பாளர்கள் பலருக்கு பாட்டு வாய்ப்பளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்கள் இந்நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளில் இருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், 30 க்கு மேற்பட்ட பாடகர்கள் 13 க்கும் மேற்பட்ட முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில், 250க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பதோடு, பல திறமையாளர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது.

ஜூனியரில் பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் என பல திறமையாளர்கள் திரைத்துறையின் முன்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர்.

சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகர்கள் பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ரக்‌ஷிதா சுரேஷ், பூவையார், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா RK தென்னிந்தியத் திரைத்துறையில் மிகச்சிறந்த முன்னணி பாடகர்களாகக் கோலோச்சி வருகின்றனர்.

மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ல்ட் டூர், வெளிநாட்டு இசை கச்சேரி, உள்நாட்டு இசைக்கச்சேரி என, பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்கள் பங்கு பெற்று வருகிறார்கள்.

திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வாய்ப்புகளை குவித்து தரும், புகலிடமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது.

தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல நெகிழ்வான தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சிறுவன் கலர் வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர் வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் இசையமைப்பாளர் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர் வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் இசையமைப்பாளர் தமன்.

ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது.

More News

என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். பிரபல நடிகை மீது கணவர் குற்றச்சாட்டு..!

பொதுவாக நடிகைகள் தான் தங்கள் கணவர் தங்களை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறுவது உண்டு. ஆனால் ஒரு நடிகையின் கணவர் தன்னை நிர்வாணமாக்கி தனது மனைவி

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு, ஆனால்.. விஜய பிரபாகரன் பேட்டி!

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையின் உடல்நிலை

அரசியல் கட்சி தொடங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய்யின் மாஸ் திட்டம்..!.

 தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே அவர் ஒரு மாஸ் அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதுதான் 'தளபதி 68' படம் என்றும்

'ஆக்சன்' என்று சொல்லிவிட்டால் உடனே புயலாக மாறி விடுவார்: 'லியோ' விஜய் குறித்து வில்லன் நடிகர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு

யோகி காலில் விழுந்தது ஏன்? சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.