சூப்பர் சிங்கர் ஜட்ஜ் பென்னி தயாள் மனைவியை பார்த்ததுண்டா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,March 12 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருப்பவர் பென்னி தயாள் என்பதும் இவர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கம் தரும் வகையில் பேசுவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பென்னி தயாள் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடகர் பென்னி தயாள் அபுதாபியைச் சேர்ந்தவர் என்பதும் அங்கேயே அவர் பள்ளி கல்லூரில் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் ஜர்னலிசம் படித்த பென்னி தயாள் தனது நீண்ட நாள் காதலியான கேத்தரின் தங்கம் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’மாயா மாயா’ என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகமான பென்னி தயாள் அதன் பிறக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி உள்பட பல மொழிகளில் இவர் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், ஜிவி பிரகாஷ், ஜேம்ஸ் வசந்தன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் பென்னி தயாள் திருமண மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

More News

'சந்திரமுகி' கேரக்டரில் நடிப்பது இந்த நடிகையா? அப்ப கங்கனா ரனாவத் இல்லையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான 'சந்திரமுகி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 'சந்திரமுகி 2' படத்தை பி வாசு இயக்கி வருகிறார்.

'நினைவிருக்கா? ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மகன் அமீன்.. 'பத்து தல' சிங்கிள் அறிவிப்பு..!

 சிம்பு நடித்துள்ள 'பத்து தல' என்ற படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையில் அவருடைய மகன் அமீன் பாடிய சிங்கிள் பாடல் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தங்கலான் படம்… ரொம்பவே விறுவிறுப்பான தகவலைப் பகிர்ந்த நடிகை பார்வதி!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் “தங்கலான்” திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் நடிகை பார்வதி

ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த ரொனால்டோ… வைரலாகும் காட்சிகள்!

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி தோல்வியடைந்ததும் கோபத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இன்பநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. பிரத்யேக பேட்டி..!

நடிகர் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசி