சூப்பர் சிங்கர் பாடகருக்கு விலை மதிப்பில்லா பிறந்த நாள் பரிசு கொடுத்த மனைவி!

  • IndiaGlitz, [Friday,October 14 2022]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் என்று பலர் திரையுலகிலும் பாடி வருகின்றனர் என்பதும் பலர் பிரபலமான பாடகராக உள்ளனர் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் ஒருவரின் பிறந்த நாளில் அவருடைய மனைவி விலை மதிப்பில்லா பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா. இவர் ஜெஸ்ஸி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று அஜய் கிருஷ்ணா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருடைய மனைவி ஜெஸ்ஸி தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்து தனது கணவருக்கு விலைமதிப்பில்லா பிறந்தநாள் பரிசாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து ஜெஸ்ஸி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நான் தொலைக்காட்சியில் பார்த்த மிகச் சிறந்த பாடகர், சிறந்த வருங்கால கணவர், சிறந்த கணவர், அஜய் கிருஷ்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நான் எடுத்த எல்லா முடிவுகளும் சிறப்பான முடிவுகளாக இருந்ததற்கு அவரே காரணம். தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து சிறந்த அம்மா அப்பாவாக இருப்போம். எனது வாழ்நாளில் இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசாக உங்களுக்கு எதையும் கொடுக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம் வாழ்க்கையின் புதிய கட்டம் உருவாகியிருப்பதை அடுத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஜெஸ்ஸியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

வாடகைத்தாய் சர்ச்சை விவகாரம்.. இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் பதிவு!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதாக ஒருபக்கம் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் தனது

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்.. பிக்பாஸ் நடிகையின் சாட்டையடி பதிவு!

நடிகை நயன்தாரா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

'பாண்டவர் இல்லம்' நடிகைக்கு நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்!

'பாண்டவர் இல்லம்' என்ற சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமான நிலையில் ஐந்தாவது மாதத்தில் நடந்த வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில்

சத்யாவை திட்டமிட்டே கொலை செய்தேன்: சதீஷின் அதிர்ச்சி வாக்குமூலம்

 கல்லூரி மாணவி சத்யாவை இரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் வாக்குமூலம் கொடுத்த நிலையில் அந்த வாக்குமூலத்தில் தற்செயலாக இந்த கொலை சம்பவம் நடைபெறவில்லை என்றும் திட்டமிட்டே கொலை

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் தந்தையும் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

பரங்கிமலையில் நேற்று கல்லூரி மாணவி சத்யாவை, கல்லூரி மாணவர் சதீஷ் என்பவர் ஒருதலையாக காதலித்த நிலையில் திடீரென ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.