சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சூப்பர் ஹிட் ஜோடி

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி, தமன்னா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் இன்னும் சொல்லப்போனால் பிரபல அரசியல்வாதிகளிடம் இருந்தும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி விரைவில் தனது அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். இதுகுறித்த ஆரம்பகட்ட பணிகளில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆன ஜோடி இந்த படத்தில் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்தில் நடித்த பிரபுதேவா-தமன்னா ஜோடிதான் சீனுராமசாமியின் அடுத்த பட நாயகன், நாயகி என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

More News

'தல 57' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் தேதி

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில் இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதில் இருந்து எதிர்பார்ப்பின் விகிதம் எகிறியது...

பிரபல நடிகையின் தாத்தா காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மகாராஷ்டிரா மாநில கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

நான் என்ன தவறு செய்தேன்? கமல்ஹாசனின் வேதனை டுவீட்

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழைந்து பெயர் தேட வேண்டாம் என்றும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியபோது தைரியமாக அதை தட்டிக்கேட்டதும் கமல்ஹாசன் மட்டுமே...

புதிய போராட்டமா? மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னை மெரீனாவில் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உலக தமிழர்களை எழுச்சி அடைய செய்தது. அதுமட்டுமின்றி இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது...

மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உதவி செய்யுங்கள். வேட்பாளரின் நூதன கோரிக்கை

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துவிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன...