சன்னிலியோன் இதுவரை முயற்சிக்காத புதிய விஷயம்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

கனடாவிலும் பாலிவுட்டிலும் சன்னிலியோன் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை சொல்லி தெரிவதில்லை. கூகுளில் பிரதமரையே மிஞ்சும் அளவுக்கு டிரெண்டில் இருப்பவர் சன்னிலியோன் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் முதல்முறையாக சன்னிலியோன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்ற படத்தில் ராணியாக நடிக்கின்றார். தொடர்ந்து 150 நாட்கள் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ள சன்னிலியோன், இந்த படத்திற்காக குதிரையேற்றம், வாட்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தின் வசனங்களை புரிந்து பேசுவதற்காக அவர் தமிழ் மொழியையும் கற்க முடிவு செய்துள்ளார். இத்தனை வருடம் பாலிவுட்டில் நடித்திருந்தாலும் இந்தி மொழியை கற்பதில் ஆர்வமில்லாத சன்னிலியோன், முதன்முதலில் தமிழ் மொழியை பேச அவர் முயற்சிப்பது புதிய விஷயமாக கருதப்படுகிறது.

சன்னிலியோன், நவ்தீப், நாசர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு என ஒரு பெரும்தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வீர மங்கையையும் கொஞ்சம் வைரலாக்குவோமே!

மலையாள நடிகை ப்ரியாவாரியர் நடித்த ;'ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசரில் நிகழ்த்திய புருவ நடனம் மற்றும் கண்ணசைவு இந்தியா முழுவதும் வைரலாகும் அளவுக்கு ஒரு பெரிய விஷயமாக இணையதளங்களில் அலசப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்: மேலும் சில தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். இதில் 'காலா;' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தெதி ரிலீஸ் ஆகவுள்ளது.

தல அஜித்தின் 'விசுவாசம்' படப்பிடிப்பு எப்போது? வெளிவராத தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை

கஸ்தூரியின் 'மய்யம்' சந்தேகத்தை கமல் தீர்ப்பாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயரில் தொடங்கினார்.

பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்றுதான்: கமல் அரசியல் குறித்து ரஜினிகாந்த்

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: